Thursday 5 April 2012

காதல் கவிதை


உன்னை 
பார்க்கும் வரை 
காதல் என்ற சொல் இனிக்கவில்லை 
உன்னை 
பார்த்த பின்பு 
காதலை விட இனிப்பான சொல் வேறில்லை ...
உன் 
விழிமட்டும் பார்திருந்தால் 
என் 
வாழ்வில் பசி இருக்காது ...
உன் 
விழி பார்க்காமல் இருந்திருந்தால் 
என் 
வாழ்வில் ஒளி பிறந்திருக்காது ...
நாம் 
விரல் கோர்த்திருந்தால்
இன்னொரு கிரகத்தில் பூ பூக்கும் ...
நாம் 
விரல் சேராதிருந்தால் 
இப்பூமியில் பூகம்பம் வெடிக்கும் ...
பெண்ணே !
காதல் 
நம்மை சொர்க்கத்திற்கு 
கூட்டிசெல்லும் தொடர்வண்டி ... 
அது தொடரட்டும் 
நாம் வாழ்நாள் எல்லாம்  தாண்டி ! 

No comments:

Post a Comment