Friday 20 April 2012

நெஞ்சமே.. நெஞ்சமே..



Love lost poem.

நெஞ்சமே.. நெஞ்சமே.. மெல்ல நீ தூங்கு..
துயரின்றி மெல்ல நீ தூங்கு.
விழிகள் சிந்தும் நீரில் உந்தன்
சோகம் தீர்ந்து போகுமா?
மேகம் உடைந்து போவதாலே
வானம் தரை தான் சாயுமா?'

காதல் செய்தால் பிழைகள் என்பர்
தனது காதல் மறைத்து தான்.
உண்மை காதல் பலதும் உண்டு
இன்னும் காதல் சிறையில் தான்.
நாகரிகம் கற்று தந்தும்
காதல் இன்னும் எதிரி தான்.
இருக்கும் ஜீவன் உனது என்றால்
காதல் பிழையே இல்லை தான்.
கனவு கண்டு வாழும் காதல்
கடலில் கரைத்த காயம் தான்.
நெஞ்சமே.. நெஞ்சமே.. மெல்ல நீ தூங்கு

No comments:

Post a Comment