Friday 20 April 2012

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை




ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....

எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..

நீ ஸ்பரிசம் தந்தாய்
நான் பரிசளித்தேன்...
எதற்காக என்று
இன்னும் விளங்கவில்லை...

எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிகாதாவைகள்
எது எதுவென இதுவரை
நான் கேட்டதில்லை...
நீ சொன்னதுமில்லை...

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..

நம்மை வெல்லத்துணிந்த
காதல் நிமிடங்களில்
நாமாயிருந்தோம்...

தடையில்லா காட்டாற்றைப் போல
வலிமறந்து, வழிமறைத்த
உன் காதல் பெருவெள்ளத்தில்
திளைத்த வேளைகளில்
மொத்தமாய்
தொலைந்துபோயிருந்தேன்
உனக்குள்...

இது எங்கே முடியுமென்று
தெரியாமல் சுழன்றோம்,
முடியாமல் இருக்க
முடிந்தவரை தொடந்தோம்..

அன்றும் அப்படி தான்
காலை சூரியன் மாலைக்குள்
ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில்,
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..

இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....

No comments:

Post a Comment