Thursday 26 April 2012

விடுகதைகள்

1. அரைச்சாண் ராணி;​ அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?
2. ஆனை விரும்பும்,​ சேனை விரும்பும்;​ அடித்தால் வலிக்கும்,​ கடித்தால் இனிக்கும். அது என்ன?
3. இரவெல்லாம் பூங்காடு;​ பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?
4. உருவத்தில் பெரியவன்;​ ஊருக்கு உயர்ந்தவன். அவன் யார்?
5. உருவத்தில் சிறியவன்;​ உழைப்பில் பெரியவன். அவன் யார்?
6. ஊரெல்லாம் வம்பளப்பான்;​ ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?
7. எட்டி நின்று பார்ப்பான்;​ பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?
8. ஏறினால் வழுக்கும். இனிய கனி தரும். காயைத் தின்றால் துவர்க்கும். அது என்ன?
9. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?
10. ஓயாது இரையும் இயந்திரம் அல்ல;​ உருண்டோடி வரும் பந்தும் அல்ல. அது என்ன?
11. கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
12. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?
13. தரையில் தாவுவான்;​ தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?
14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?
15. ஊரெல்லாம் சுற்றும் தலை. அது என்ன தலை?


விடைகள்:
1.வெண்டைக்காய்
2.கரும்பு 
3.வானம் 
4.கோபுரம் 
5.எறும்பு 
6.நாக்கு 
7.கேமரா 
8.வாழை 
9.உள்ளங்கை 
10.கடல் அலை
11.சீப்பு 
12.இளநீர் 
13.தவளை
14.ரூபாய்

No comments:

Post a Comment