Thursday 19 April 2012

மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை



மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தம்பிஜயா தமிழ்செல்வி வயது (40) என்ற ஆசிரியையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இவர் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த ஆசிரியையின் பிறந்த தினத்தையடுத்து, அவர் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு விட்டு, அதன்பின்னர் சந்தைக்கும் சென்று பொருட்களை கொள்வனவு செய்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, தனது வழமையான படுக்கை அறையில் குறித்த ஆசிரியர் இருந்துள்ளதாகவும், அவரின் தாயார் மதிய உணவிற்காக மகளை அழைக்கச் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கி மகள் உயிரற்ற நிலையில் காணப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment