Friday 20 April 2012

பெரும்பாலான இன்றைய காதலின் எதிர் கால முடிவு- காதல் தோல்வி.

பெரும்பாலான இன்றைய காதலின் 
எதிர் கால முடிவு- காதல் தோல்வி.

காதல் ஒரு கட்டு மரம்- அதில் 
விழும் ஒரு ஓட்டையும்
படகை கவிழ்ப்பதை போல் தான் 
காதலும் கவிழ்கிறது.

நான் உன்னையும், 
நீ என்னையும் 
உண்மையாக தானே நேசித்தோம்- பின்பு 
எப்படி பிரிந்தோம் நாம்.

உன்னை அடைய நான் அடைந்த 
துன்பங்கள் எத்தனை,
உன்னை இழந்த பின் நான் 
அடைந்த வேதனைகள் தான் எத்தனை.

என் காதலின் முடிவு 
கண்ணீரில் தானே முடிந்தது-
உன் காதலின் முடிவு 
கல்யாணத்தில் அல்லவா முடிந்தது.

காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் 
கோழை இல்லை நான்.
உன்னை மறக்க இன்னொருத்தியை 
தேடிய எதார்த்தவாதி தான் நான்.

உன் நினைவுகளை சுமக்க 
முடியவில்லை என்னால்- அதனால் 
அன்பானவளின் அரவணைப்பை 
தேடினேன் ---கிடைத்தது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் 
கல்யாணத்தில் தான் 
காதலில் இல்லை..

காதலில் தோற்றவர்களே துயரம் கொள்ளாதீர்கள்...
ஒரு காதலின் தோல்வியில் தான் 
அடுத்த காதல் பிறக்கிறது என்பதை மறவாதீர்கள்.

காதல் செய்வீர்!! வெற்றி கிட்டும் வரை!!

No comments:

Post a Comment