Monday 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »புத்தர்


அனைவரையும் நேசியுங்கள்

* பிறரது குறை, நிறைகளை கவனிக்காமல், நாம் செய்யும் நல்வினை, தீவினைகளில் உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* நல்ல குணமுள்ளவர்கள் எதிலும் பற்று கொள்வதில்லை. இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவது இல்லை. சுகமோ, துக்கமோ எது ஏற்பட்டாலும் எழுச்சியடைவதும் இல்லை, சோர்வு கொள்வதும் இல்லை.
* பூமிக்கு ஒப்பான பொறுமையும், வாசல் தூண் போன்ற உறுதியும் சேறில்லாத குளத்து நீர் போன்ற தூய்மையும் யாரிடம் இருக்கிறதோ, அவன் பிறப்பு, இறப்பு எனும் சுழலில் சிக்கிக் கொள்வதில்லை.
* கடலில் வந்து கலக்கும் ஆறுகள் தங்கள் தனிப்பட்ட தன்மையை இழந்து, மகாசமுத்திரம் என்ற பெயரில் வழங்கப்படுவது போல், எல்லா ஜாதியினரும் தங்கள் வம்சாவளியை துறந்து ஒற்றுமையாய் இருந்தால் சகோதரர் ஆகிவிடுவார்கள்.
* அனைவரையும் நேசியுங்கள். எப்போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவீர்கள்.
புத்தர்

நல்லொழுக்கம் பேணுங்கள்

* அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.
* அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப் போல் அவனை விட்டு அகலும்.
* வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள், ஊக்கமும் அறிவும் உடையவனாய் இரு. மாசுக்கள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
* வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் நான்கு பயன்களும் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காப்பதுடன், உடலை அடக்கப் பழக வேண்டும். தீய ஒழுக்கத்தை ஒழித்து நல்ல ஒழுக்கத்தையும் பேணி காக்க வேண்டும்.
* வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.
- புத்தர் 

கோபத்தை அறவே குறையுங்கள்

* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.
* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும் கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக் கையில் வைத்திருப்பவர்களே.
* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.
* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்துவருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் பயன்கள் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும். உடலை அடக்கிப் பழக வேண்டும். ஆசையை அடியோடு 
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும். 
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன் அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே உண்மையான அழகு உடையவன்.
- புத்தர்

நல்ல எண்ணம் வேண்டும்

* உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்
களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் 
மனிதன் விரைந்து முன்னேறுவான், 
காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
* கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை 
நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும்.
* சந்தனக்கட்டை, மல்லிகை முதலியவற்றின் மனம் 
காற்றின் எதிர்த் திசையில் செல்வதில்லை, ஆனால், 
நல்லவர்களின் புகழ் மணமோ சூறைக் காற்றையும் எதிர்த்துக் செல்கிறது. 
* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் செயல்பட்டால், அவனை விட்டுவிலகாத நிழல் போல, மகிழ்ச்சி
அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.
* மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, 
நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே சிறந்த அதிர்ஷ்டத்தை தரும் குணங்களாகும்.
* நன்றாக கட்டப்பட்ட வீட்டில் மழை நீர் நுழைவதில்லை, அதுபோல் நல்ல உள்ளத்தில் ஆசை நுழைவதில்லை.
- புத்தர்

மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

* உடல், மனம், நாக்கு இம்மூன்றையும் அடக்கி வாழும் அறிவாளிகளே 
உண்மையான அடக்கம் கொண்டவராவர். 
*வாய்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அதில் நம்பிக்கை 
கொள்ளுங்கள். அதன் இனிமை கசப்பானது என்று கருதினாலும் அதை உறுதியாக 
நம்புவதை மட்டும் கைவிடாதீர்கள்.
* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும் செயல்புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது. 
* போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட 
தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.
*புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை. 
நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று 
கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.
* அறிவுக்கூர்மையும், நேர்மையும் உறுதிப்பாடும் 
உள்ளவராய் உங்களோடு ஒத்துப்போகக் கூடிய
ஒரு துணை கிடைத்தால் அவரை வழித்துணையாய்க் கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
- புத்தர்

நல்ல மனமே சிறந்த வழிகாட்டி

* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே. 
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை. 
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.
-புத்தர்



எப்போதும் நிதானமாக இருங்கள்

* சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன். 
* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும். 
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.
* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். 
* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.
-புத்தர்


அன்பான ஒரு வார்த்தை போதும்!

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.
* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.
* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர். 
-புத்தர்

தானே தனக்குத் தலைவன்

* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். அடைக்கலமாக ஒருவன் சத்தியத்தை சரணாகதி அடைந்து விட்டால், அதன் பின் வேறொன்றையும் சரணடைய வேண்டியதில்லை.
* ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? தன்னை நன்றாக அடக்கப்பழகிக் கொண்டவன் பெறுவதற்கு அரிய நல்லபேறுகளை அடையத் தகுதியுடைவனாகிறான்.
* கரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டில் மழைநீர் இறங்குவதில்லை. அதுபோல, நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனதில் வீணான ஆசைகள் புகுவதில்லை.
* மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மனோதர்மமே நிர்ணயம் செய்கிறது. நல்ல எண்ணத்தையே சிந்திக்கும் ஒருவனை நிழல்போல இன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும். 
* நல்ல எண்ணங்களால் தன் உள்ளத்தை தூய்மையாக்கிய நிலையில் மனமானது, ஆழமான,அமைதியான ஏரியைப் போல் தூய்மையும், நிம்மதியும் பெற்றுவிடும். 
* மடிமை என்னும் சோம்பலில் வாழவேண்டாம். மூடர்கள் மட்டுமே சோம்பலில் மூழ்கி விடுவார்கள்.
* பரிசுத்தமான ஒழுக்கம் மனிதனை அபாயங்களில் இருந்தும், நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்தும் பாதுகாக்கும். வாழ்வில் உயர்நிலைகளை அடைய ஏணிபோல தூயஒழுக்கம் உதவுகிறது. 
புத்தர்


படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர். 


* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார். 
-புத்தர் 

ஆன்மிக சிந்தனைகள் »பைபிள்


சபிப்பவரையும் வாழ்த்துங்கள்

* சுமைகளைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்.
* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களை சபிப்பவரையும் வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.
* கொழுத்த எருதுக் கறியைப் பகையோடு உண்பதைவிட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துக் காலங்களில் உதவவே சகோதரன் பிறந்தான்.
* தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனே உயர்த்தப்படுகிறான்.
* உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது, ஆனால், வேலையாட்களோ வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

பொறுமையுடன் காத்திருங்கள்

* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.
* பயிரிடுபவரைப் பாருங்கள், அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்.
* கடவுளின் செயலுக்காக நான் மவுனமாகக் காத்திருக்கிறேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே.
* வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
* சிற்றலைகளும், பேரலைகளும் என் மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் கடவுள் தம் பேரன்பைப் பொழிகின்றார்.
* நாங்கள் கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால், பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
* தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்க, தங்களிடம் பொருள் இருக்கும் வகையில் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
பைபிள் பொன்மொழிகள் 

எல்லாருக்கும் நன்மை செய்யுங்க!

* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே! சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். 
* வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே. 
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். 
பைபிள் பொன்மொழிகள்

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார்.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். 
* தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால், தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும். 
* நீங்கள் எந்த அளவு அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
* உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களால் அதிலிருக்கும் ஒரு ரோமத்தைக்கூட வெள்ளையாகவோ, கறுப்பாகவோ மாற்ற முடியாது.
* ஜெபம் செய்யும் போது கடவுளிடம் எவற்றைக் கேட்டு கொள்வீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

ஓடினாலும் களைப்பு வராது

* சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியதாகும்.
* மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட, அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது.
* கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றலை பெறுவர். அவர்கள் ஓடுவர், களைப்படையார், நடந்து செல்வர், சோர்வடையார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி அனைவருக்கும், எப்போதும் நன்மை செய்யவே விரும்புங்கள்.
* ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவோர், தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்தட்டும்.
* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைத்த வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

நன்றி சொல்வோம் இறைவனுக்கு!

* கடவுள் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கிறார். கடவுள் அருளையும் மேன்மையையும் அளிப்பார்.
* கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
* கடவுளே! என் இளமை முதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.
* ஒருவர் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; அனைவரிடமும் பொறுமையாயிருங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் உங்கள் எவருக்கும் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்

நானே உலகின் ஒளி

* ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலமும் பசியடையான். விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலமும் தாகமடையான்.
* இருக்கிறவரும், இருந்தவரும், மீண்டும் வருகிறவருமாகிய சர்வ வல்லவராகிய நான், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.
* இரண்டு பேர் மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடி இருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன். நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். 
* நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னைக் கண்டவன் கடவுளை கண்டவன். நானும் கடவுளும் ஒன்றாக இருக்கிறோம். 
* நான் உலகின் ஒளியாயிருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். 
* வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தருவேன். 
இயேசுநாதர்
இன்று கிறிஸ்துமஸ் 

நேர்மைக்கு துன்பம் இல்லை

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. அவன் தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக இருக்கிறான்.
* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும். நேர்மையானவர்களோ எப்பேர்பட்ட துன்பத்திலிருந்தும் விடுவிக்கப்படுவர்.
* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக் கூட பிரமாதப்படுத்தி விடும். நாக்கிலிருந்து வரும் சொற்களே ஒருவனின் வாழ்வை நிர்ணயம் செய்யும்.
* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம்.உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைக்காதே.
-பைபிள் பொன்மொழிகள் 


மனசுத்தம் உள்ளவரின் நண்பன்

* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.
* கடவுள் நமக்கு பயம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* மனசுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த நாட்டை ஆள்பவன் கூட நண்பனாகத் தான் இருப்பான். அவனுடைய உதட்டு அசைவை அனைவருமே விரும்புவர்.
* அவர் (கர்த்தர்) தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
* நீ ஒருவனிடம் எதையாவது அநியாயமாக வாங்கினால் நான்கு மடங்காக திரும்ப செலுத்த வேண்டி வரும்.
* பெற்றோர்களே! பாவச் செயல்களுக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த வேண்டாம், உட்படுத்தினால் ஒரு நாள் நாமும் கதற நேரிடும்.
* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
-பைபிள் பொன்மொழிகள் 

விழித்திருந்தால் வெற்றி பெறுவாய்

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போது செய்.
* உன் கடவுளாகிய ஆண்டவர், உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* தூங்கி கொண்டேயிருப்பதை நாடாதே, கண் விழித்திரு. உனக்கு வயிறாற உணவு கிடைக்கும்.
* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல், கடவுளின் பணியாளராய், கடவுளின் திருவுள்ளத்தை (அவரது விருப்பத்தை) உளமாற நிறைவேற்றுங்கள்.
* ஒருவர் தம்மை தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாக இருப்பார்.
- பைபிள் பொன்மொழிகள்