Sunday 18 March 2012

அடைகாத்தல், முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல், கோடை காலப்பராமரிப்பு


அடைகாத்தல்

வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
poltry_egg_incubator
அடைகாத்தல்
முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்

கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
poultry_egg laying
முட்டையிடுதல்
எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

கோடை காலப்பராமரிப்பு

முட்டையிடும்  கோழிகள் 23.8 செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு  வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.
  • குளிர்ந்த சுத்தமான குடிநீர் தாராளமாக வழங்கப்படவேண்டும். முடிந்தால் குடிநீரில் ஐஸ்கட்டிகளை உடைத்துப் போட்டு குளிர்ந்த நீராகக் கொடுக்கலாம்.
  • கோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கு நிழல் தரும் மரங்கள் இருக்கவேண்டும்.
  • கூரைமீது அவ்வப்போது நீரைத் தூவுமாறு குழாய் அமைக்கலாம். இவ்வாறு கூரையின் மேல் நீர்த்தெளிப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.
  • கம்பிவலை அமைப்புத் தேவைப்படும்போது சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல காற்றோட்டம் இருக்கும்.
  • பழையக் கூளங்களின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். பழையக் கூளங்கள் நீக்கப்பட்ட இடத்தில் 2 அளவிற்குப் புதிய கூளங்களைப் பரப்பவேண்டும்.
  • அதிகாலை நேரத்தில் செயற்கை ஒளிவிளக்குகளைப் போட்டு வெளிச்சம் அளிப்பதன் மூலம் கோழிகள் குளிர்ச்சியான நேரத்தில் அதிகத் தீவனம் எடுத்துக்கொள்ளும்.
  • தீவனத்தில் அதிகக் குருணை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்குக் கால்சியம் சத்துக் கிடைக்கும். இதனால் முட்டையின் ஓடுகள் சற்று கடினமாக எளிதில் உடையாததாகக் கிடைக்கும்.
  • எலைக்டிரோலைட், விட்டமின் சி, நுண்ம உயிரிக்கலவைகள் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதால் வெப்பத்தாக்கம் சற்றுக் குறையும்.
  • மின்விசிறி வசதி அமைத்தல் சிறந்தது.
  • நாளின் குளிர்ந்த காலை, மாலை வேளைகளில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.
  • கொட்டகையின் பக்கங்களில் ஈரமான சாக்குப் பைகளைத் தொங்கவிடுதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
  • மண் பானைகளில் நீரை வைத்தால் எப்போதும்  குளிர்ந்து இருக்கும்.
  • தெளிப்பான்களை கொட்டகையினுள் ஆங்காங்கு அமைக்கவேண்டும்.


No comments:

Post a Comment