Friday 23 March 2012

பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு

பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு

பகவான் பாபாவின் மகிமை பற்றி பல பழைய கிரந்த நூல்களிலும், நாடி ஜோதிட ஏடுகளிலும் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. பல ஜோதிடர்கள் அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்களைக் கூறி இருக்கின்றன.
பகவான் பாபா
இந்தத் தளத்தில் அவர் சமாதி அடைந்து விடுவார் என்பதை, ஏப்ரல் 5, 2011 அன்றே கோபாலகிருஷ்ணன் என்ற ஜோதிடர் கணித்துக் கூறியிருக்கிறார். (பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம். இந்தத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மார்ச் 30 அன்று கணித்துக் கூறியிருக்கிறார். முன்னது அப்படியே பலித்தது போல் பின்னதும் பலிக்குமா என்பது இரு வாரங்களில் தெரிந்து விடும்)
மேலும் பல நாடி ஜோதிட ஏடுகளில் பாபாவின் முற்பிறவி மறுபிறவி பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது.
இந்தத் தளத்திலும் பாபாவின் நாடிக் குறிப்பு பற்றிப் பார்க்கலாம்.
இனிக் கீழே உள்ளது பாபாவின் தமிழ் நாடி ஜோதிடக் குறிப்பு.
பாபா நாடி - பக்கம் 1
பாபா நாடி - பக்கம் - 2
பாபா நாடி - பக்கம் - 3
பாபா நாடி - பக்கம் - 4
பாபா நாடி - பக்கம் - 5
பாபா நாடி - பக்கம் - 6
பாபா நாடி - பக்கம் - 7
பாபா நாடி - பக்கம் - 8
பாபா நாடி - பக்கம் - 9
பாபாவின் ரேகை அமைப்பு
இந்தப் பாடல்கள் தமிழிலேயே இருக்கின்றன. ஆதலால் நான் தனியாக விளக்கம் அளிக்க விரும்பவில்லை. படித்து விட்டு இந்தப் பதிவிற்காக என்னை வசைபாடுபவர்கள் பாடலாம். திட்டுபவர்கள் திட்டலாம்.  நன்றி

பாபா, மனிதரா, அவதார புருடரா?

பாபா
இன்று காலை 7.40 மணி அளவில் ஸ்ரீ சத்யசாய் பாபா மறைந்தார். பல நாட்களாகவே அவர் நோயுற்றிருந்த போதும், அவர் மீண்டு விடுவார் என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளி, எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி தமது 86ம் வயதில் பாபா காலமானார்.
எல்லோரது நோயையும் தீர்க்கும் பாபா, ஏன் தன் நோய்களைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை? பாபா ஒரு பொய்யர் என்றெல்லாம் பல “அறிவு ஜீவிகள்” குரல் கொடுத்தனர். மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எந்த ஒருவரும் சுயநலத்திற்காக எந்தச் செயல்களையும் செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் உண்மையான சேவையாளர்கள் இல்லை. இது அன்னை தெரசா முதல் மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி வரை அனைவருக்கும் ஒன்றே!
அது போலவே தான் பல ஆற்றல்கள் கைவரப் பெற்றிருந்தாலும், புவியில் மானுடராகப் பிறக்கும் ஒருவர் எந்தெந்த விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டுமோ அதன்படியே பாபா நடந்தார். பலரது உயிரை மீட்டுத் தந்த ஆற்றல் மிக்க பாபா, தன் உயிரையும் மீட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்ய விரும்பவில்லை.
மானுடராக அவர் வாழ்ந்தாலும் அவர் ஒரு அவதாரபுருடர் என்பதை அவரை அண்டியவர்கள், அவரது அருள் பெற்றவர்கள் உணர்ந்தனர். கடவுளாகக் கருதி வழிபட்டனர். ஆனால் சில ‘அறிவுஜீவிகளோ’ அவரி ’மேஜிக்’ செய்பவர் என்றும், ஏமாற்றுப் பேர்வழி என்றும் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.
எந்த ’மாஜிக்’ ஆசாமிக்கு உலகம் பூராவும் பக்தர்கள் இருக்கின்றனர்? எந்த ’மேஜிக்’ ஆசாமி 70 ஆண்டுகளுக்கும் மேலாய் மேஜிக்கைச் செய்து கொண்டே இருக்க முடிந்தது? எந்த மேஜிக் ஆசாமியால் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் முன் கூட்டியே சொல்ல முடிந்தது?
இருந்த இடத்தில் இருந்து கொண்டே தமது மேதாவிலாசத்தைக் காட்டிய அறிவு ஜீவிகள், தங்கள் பங்கிற்கு பாபாவிடம் ஆரம்பத்தில் தொண்டராக இருந்து பின்னர் அந்நிய மதமாற்ற சக்திகளுக்குத் துணை போய், பாபாவை வசைபாடிய, அவரைக் குறை சொன்ன “அன்பர்களை” துணைக்கு அழைத்துக் கொண்டனர்.
சாயி
சத்ய சாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்று பாபா செய்திருக்கும் அறப்பணிகள் ஏராளம், ஏராளம். எத்தனையோ கோடிக்கணக்கான ஏழை மக்கள் அவரது அறப்பணிகள் மூலம் பயன்பெற்றிருக்கின்றன. அவரது நிறுவனங்களில் கல்வி பயின்றும், சிகிச்சை பெற்றும் பலனடைந்துள்ளனர்.
பாபா செய்யும் அற்புதங்களை வெறும் ’மேஜிக்’ என்று சொல்கின்றனர். சொல்பவர்களால் அந்த மேஜிக்கைச் செய்து காட்ட முடியுமா? சும்மா வெறும் கையில் விபூதி வரவழைப்பதல்ல. நோயை குணமாக்குவது, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுவது, இறைக் காட்சி அளிப்பது என்பதை ’மாஜிக்’ என்று பிதற்றுபவர்களால் செய்து காட்ட முடியுமா?
தான் ஏன் இந்த அற்புதங்களைச் செய்கிறேன் என்றும் பாபா சொல்லியிருக்கிறார். ”ஆண்டவனை நோக்கி உங்களை ஈர்ப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டுதான் இந்த அற்புதங்கள்” என்று சொல்லியிருக்கிறார் பாபா. இதை உணராதவர்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
பாபா, இக்காலத்தில் பல்கிப் பெருக்கியிருக்கும் மூச்சு தியானப் பயிற்சி ஆசாமிகளைப் போன்றவரல்லர். அவர் ஒரு அவதார புருடர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன.  இந்த மூச்சுப் பயிற்சி ஆசாமிகள் அந்த முத்திரை, இந்த முத்திரை, அந்த ஆனந்தம், இந்த ஆனந்தம், அந்தக் கலை, இந்தக் கலை, பயிற்சி என்று பணம் கறப்பதில் மட்டுமே குறியாக இருப்பபவர்கள். இவர்களால் தற்காலிக மன அமைதியை ஏற்படுத்தித் தர இயலுமேவிர, “ஆன்ம அனுபூதியையோ” அல்லது “ஆன்ம வளர்ச்சி” மற்றும் ”ஆன்ம உயர்வை”யோ உண்டாக்கித் தர இயலாது.
யாரோ ஒரு குரு (?) உங்களுக்கு சமாதிப் பயிற்சி அளிக்கிறேன் என்கிறார். சமாதி என்றால் என்ன அர்த்தம்? சமம் + ஆதி என்பது பொருள். ஒரு ஆன்மா, அதன் ஆதி நிலைக்குச் சமமான நிலையை எய்துவதே சமாதி. அதை யாராவது அளிக்க முடியுமா? அல்லது பெறத்தான் முடியுமா? தானாக உணர்ந்து அடைவது அல்லவா சமாதி. நம் மகான்களும், ஞானிகளும் அப்படித்தானே சமாதி அடைந்தனர். ஆனால் இந்தக் கால மூச்சுப் பயிற்சி ஆசாமிகள் என்னென்னவோ பிதற்றி மக்களை ஏமாற்றுகின்றனர். பதஞ்சலி யோக சூத்திரத்திலிருந்து சிலவற்றை அரைகுறையாக அறிந்து கொண்டு, அதை சற்றே நவீனமாக்கி, தங்களது பக்தர்களுக்கு சொல்லித் தருகின்றனர். நிரந்த அமைதியை, நிம்மதியை, ஞானத்தை, ஆனந்தத்தைப் பெற விரும்புபவர்களும் அதை முழுமையாக நம்பி ஏமாறுகின்றனர். ஆனால் முழுமையான அமைதியை இந்த ஆசாமிகளால் தர முடிவதில்லை.
பாபாவைப் பற்றி ஆரம்பித்த இந்த பதிவு திசை மாறிச் செல்வதை உணர்கிறேன். வேண்டாம். பாபா மனிதரா, அவதார புருடரா என்பதை சில சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.
தான் ஷிர்டி பாபா அவதாரம் என்பதை தனது 14ம் வயதில் வெளியிட்டார் பாபா. ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஒரு சமஸ்தான ராணியைச் சந்தித்தபோது, அந்த ராணி சிறுவயதில் ஷிர்டி பாபாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வைத்திருந்ததை நினைவூட்டி கேட்டு வாங்கிப் பெற்றார்.  அது மட்டுமல்லாமல்  ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக நினைவு கூர்ந்ததுடன் ஷிர்டி பாபாவுடன் தொடர்பில் இருந்த சிலரையும் சந்தித்து தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்தார்.  தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் விளக்கியிருக்கிறார் பாபா.
மேலும்  சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை ஆராய இயலாது” என்று குறிப்பிட்ட பாபா ”எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.
பாபா
ஸ்ரீ பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு கீழ்கண்டவாறு அவர் அவதாரம் பற்றிச் சொல்கிறது.
………………………………………………………………
அழகுமகன் வழிவழியாய் யுகத்திலேதான்
சுந்திரமாய்க் கிருட்டிணனின் அவதாரத்தில்
சுழற்சிபல வித்தைகளும் விந்தை கூட
விந்தை பல புரிந்துபின் அவதாரம் தான்
கோதில்லா ராமனவன் கடவுளாக
பாடபல நிலைகளுடன் புண்ணியங்கள்
பல படைத்து சிர்டி சாயிபாபா
பாபாவின் அவதார புருடனாக
பக்குவமாய் அவதரித்தான் சாயிபாபா
—————————————–
—————————————-
என்றெல்லாம் வரும் பாடலில் பாபா பல்வேறு அற்புதங்கள் புரிந்து, மக்கள் குறை தீர்த்து மறுபிறவியில் பிரேம சாயியாக அவதரிப்பார் என்றும் குறிப்பிடுகிறது.
அருள்மகனே அழிவுநிலை ஏதுமில்லா
ஆயுளதை வளர்த்திடவும் வல்லவன்தான்
பொருள்முதலாம் அறநிலைகள் பலவும்காட்சி
புண்ணியமாய் வரும்பிறவி அடுத்த சென்மம்
பிறவியிலே பிரேமசாயி அவதாரமாக
பெருங்கடவுள் நிலைவாழ்வு லீலை பல்வார்
இறவாத வழிகாட்டி சத்திய செய்கை
ஏகாம்பர மாகவே வாழி முன்னே
என்று குறிப்பிடுகிறது.
இதன் மூலம் ராமனின் அவதாரமாகத் தோன்றிய ஷிர்டி பாபாவின் மறுபிறவியே புட்டபர்த்தி பாபா என்பதும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் சக்தியோடு இவ்வுலகில் அவதரித்துள்ளார், மறுபிறவியில் அவர் பிரேமசாயி ஆக அவதரிப்பார் என்பதும் தெரிய வருகிறது.
ஸ்ரீ சாயி பாபா
தான் மறுபிறவியில் “பிரேம சாயி”யாக மைசூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் அவதரிக்கப் போவதாக பாபா முன்னரே குறிப்பிடுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல; பாபாவின் முற்பிறவி அன்னையான ஸ்ரீமதி ஈஸ்வராம்பா சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் வயிற்றிலேயே பாபா மீண்டும் “பிரேம சாயி” ஆக அவதரிக்க இருக்கிறார். இதை பாபா குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல; பிரேம சாயி அவதாரத்தில் அவர் க்ருஹஸ்தராகவும் தோன்ற இருக்கிறார். 
வசந்த சாய் அம்மா
திருமதி வச்ந்த சாய் அம்மா அவர்கள் முற்பிறவியில் ராதாவாகப் பிறந்தவர்கள் என்று பாபா சொன்னதாக அவர் தெரிவித்திருக்கிறார்.   வசந்த சாய் பேட்டி  இங்கே…
பாபாவின் ஆசிர்வாதங்களுடன் வசந்த சாய்க்கு எழுதப்பட்ட கடிதம் அவரது மறுபிறவியை, அதில் அவர் பிரேம சாயியாக அவதரிக்ககப் போவதை, வசந்த சாய் அம்மா “பிரேமா”வாகப் பிறக்கப் போவதைக் கூறுகிறது.
பாபாவின் கையெழுத்து + கடிதம்
96 வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா ஏன் பத்தாண்டுகள் முன்னால் தனது உடலை உகுத்தார் என்றால் விரைவிலேயே பிரேம சாயி அவதாரம் எடுத்து மேலும் மக்கள் பணியை முழு வீச்சில் செய்யத்தான்.
எனவே பாபாவின் மறைவால் கலங்கும் பக்தர்கள் வருந்த வேண்டாம். விரைவில் பாபா பிரேம சாயியாக அவதரிப்பார். அவரை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்.
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்ம ராமாய தீமஹி
தந்நோ பாபா ப்ரசோதயாத்!

No comments:

Post a Comment