Friday 23 March 2012

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா… எங்கே… எப்படி…என்னவாக இருக்கிறார்… ஆவிகள், பேய்கள் எல்லாம் உண்மைதானா?…
முற்பிறவி, மறுபிறவிகள் எல்லாம் உண்மையா… பொய்யா…?
ஏன் மனிதப் பிறவியில் ஏழை, பணக்காரன், நோயாளி, பைத்தியம் என்று வேறுபாடுகள்… அதற்கான காரணம் என்ன…
இறப்பின் பின் என்ன நிகழ்கிறது….
பிறப்பதற்கு முன்னால் இருக்கும் நிலை என்ன…
இவை பற்றி எல்லாம் அறிய இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்…
ஆறு அத்தியாயங்களையும் நேரம் ஒதுக்கி முழுமையாகப் படியுங்கள்.
மேற்கண்ட வினாக்களுக்கு பதில் கிடைக்கும்.
இது பற்றி தோழர் தமிழ் சிங்கத்தின் கேள்வியிலிருந்து…
தாங்கள் ”எனக்கு பிடித்த தளம்” என்ற பெயரில் மரணத்திற்கு அப்பால் என்று ஒரு வெப்சைட் ஐ நினைவு கூர்ந்த்துல்லீர்கள், சரி அதன் முழு கதையையும் படித்து விட்டீர்களா…..???
படிக்காமல் இருந்ததால் தயவு செய்து படித்து முடித்துவிடவும்….,,
நான் என் நண்பருடன் அதை படித்தேன்
அவர் சொன்னார் ”என்னைய கொடுமையுது இங்கதான் படம் நடத்தி
பரிச்சை வைச்சி கொல்றாங்க-ன்ன செத்த பிறகும் விடமாட்டங்கள ”……. என்றார்
”அப்படியானால் பரிச்சையில பெயில் ஆனா மாணவர்கள் தற்கொலை செய்துக்கிறாங்களே… அவங்க நிலைமையே நினச்ச தான் பாவமா இருக்கு” என்றார் ……
இதை பற்றி தங்கள் கருத்து என்ன…..????
அந்த பக்கத்தில் முதல் 111 வரிகளில் ,. 100 வரிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் அதற்க்கு பிறகு தான் சற்று வயிற்ரை கலக்குகிறது, சரி அதுவும் போகட்டும், உண்மை அதுவானால் பிறகு என் நிலைமை என்னவாகும்……..
எனது பதில்…
தமிழ் சிங்கம்…
முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டேன். பல விஷயங்கள் முன்பே பல நூல்களில் படித்தது. சில உணர்ந்தது (??!!). மொத்தத்தில் பகவான் ரமணர்தான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகிறார். – There is no Others.. மற்றும் அவரது புகழ் பெற்ற கருத்துக்களில் ஒன்று உடன் நினைவிற்கு வருகிறது.
“எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்ம சொரூபம் தெரியும். எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே. ஆகவே புதிய புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். ’நான் யார்’ என்பதை உள்ளுக்குள் ஆராய்ந்து பார்த்தால் ’உண்மை’ விளங்கும்” இதைத்தான் இந்தக் கட்டுரை பல்வேறு விதங்களில், பல கருப்பொருள்களில் சுட்டுவதை உணர்கிறேன். ராமகிருஷ்ணரின் ‘கர்மா’ தத்துவமும், வள்ளலார் போதித்த அன்பின் மகிமையும் இவற்றைப் படிக்கும் போது நன்றாகவே புரிகிறது. நமது உள்ளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி வாழ வேண்டிய அவசியத்தை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
அதே சமயம் தியானத்தின் வலிமையும், அருமை, பெருமையும் புரிகிறது. (இங்கே ’தியானம்’ என்று சொல்லப்படுவது நவீன ’உடான்ஸ் சாமியார்கள்’ காசு வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் மூச்சுப் பயிற்சியை அல்ல. அது உடலுக்கு வேண்டுமானால் – தற்காலிகமாக – நன்மை தரலாம். ஆனால், ஆன்ம லாபத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராது என்பது என் திடமான நம்பிக்கை.) உடலை சரியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியமும் புரிகிறது. (நான் அதில் சற்று தவறி விட்டேன்)
ஆனாலும் சில கேள்விகள் உள்ளன. சில விளக்கங்களும் தேவைப்படுகின்றனதான்.
//ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தனது பிறக்கும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களைப் பற்றி அறிவதற்கு நாமிங்கே பகிடியாக ‘மேலுலகக் கணணி’ என்று செல்லமாக அழைக்கும் ஒரு விதமான கொம்பியூட்டர் சிஸ்டத்துடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்கு எட்டாத, சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கேயிருப்பவர்கள் அதனை விளங்கிக்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவியெடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை வசதி. ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.//
இதுதான் கொஞ்சம் புரியவில்லை அல்லது இடிக்கிறது. கம்ப்யூட்டர் என்ற வார்த்தை ஜஸ்ட் விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி தகவல் நான் படித்த/கேள்விப்பட்ட வரை மிக மிகச் சரியானதே! (பின்னாலே அதற்கு விளக்கமும் வருகிறது. எண்ணப்பதிவுகளின் தொகுப்பைத் தான் அப்படி – கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று – அழைக்கிறார்களாம்)
//பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், “இந்த இடம் ஒளிரட்டும் என்றவுடன் ஒளிவரவில்லையா?” இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டும் எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.//
இது முழுக்க முழுக்க உண்மை. எடிசனின் ஆய்வுக்குப் பல ஆவிகள் உதவின என்பது உண்மை.
// நேரகாலம் கூடிவரும்போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் நேரத்தில் தான் இது நடக்கும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ, அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் குழந்தை உயிர்வாழாது”.//
இது புரியவில்லை. ’குழந்தை பிறக்கும் தருணத்தில்தான் ஆத்மாவானது உடலுள் புகும்’ என்று சொன்னால் இந்திய புராணங்கள், அபிமன்யு, பிரகலாதன் கதைகள் எல்லாம் பொய் அல்லது மிகை என்றாகி விடும். திருமூலர் சொன்னதற்கு இது மாறாக உள்ளது. நான் அறிந்தது ’உடலில் மூளை வளர்ச்சியுறும் காலத்திலேயே ஆன்மா தாயின் உடலுக்குள் பிரவேசித்து விடுகும்’ என்பது தான். ஆகவே இதனை முழுமையாக ஏற்க இயலவில்லை. (ஆனால் பின்னால் ‘முன்பின்னோ நுழையும் ஆத்மா’ என்று வருகிறது. அந்த ’முன்’, ’பின்’ பற்றிய விளக்கங்கள் இல்லை. டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் ஆய்வில் இது போன்ற இரண்டு ’பின்’ ஆத்மா நுழைந்த சம்பவங்கள் இருக்கின்றன )
//இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், “குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. என்றார் //
இது புதிதாக இருக்கிறது. ஆனால் நன்கு வளர்ச்சியுற்றும் கூட சில குழந்தைகள் இறந்தே பிறப்பதை (என்ன ஒரு முரணான வார்த்தை!) நாம் பார்த்திருக்கிறோமே…
இப்படி நிறைய நிறைய விஷயங்கள்… அருமையான விளக்கங்கள். உண்மையில் அற்புதமான நூல் இது. மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழில் இருந்தாலும் இதற்காக நேரம் ஒதுக்கி மொழி பெயர்த்திருக்கும் (இன்னும் வளருமாம்) ஆனந்தி மகேந்திரன் நன்றிக்குரியவர். இந்த உண்மையைத் தேடி வலைப்பூவைப் படிக்கும் அனைவரையும் இந்தத் தளத்தைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். பக்கத்தில் இணைப்பும் கொடுத்துள்ளேன். (நண்பர் அண்ணாச்சாமி… இதைப் படித்து விட்டு, ’மூட நம்பிக்கையை வளர்க்கிறேன்’ என்று என்னை மீண்டும் திட்ட மாட்டார் என நம்புகிறேன் )
ஆனந்தி மகேந்திரன் அவர்களால் ஆனந்த கீதம் என்ற தளத்தில் எழுதப்பட்ட அந்தக்கட்டுரை A World Beyond என்ற ஆங்கிலப் புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் Ruth Montgomery என்ற பெண். (ரூத் மோன்ட்கோமரி). எழுத அவருக்கு உதவி, ஆவிகள் உலக உண்மைகளையும், இறப்பின் பின்னான நிலையையும் சொன்னவர் Arthur Ford – ஆர்தர் போர்டு.
ரூத் ஆவி மூலம் எழுதிய புத்தகம்
Ruth Montgomeryயின் சுவையான நேர்காணலை இங்கே படியுங்கள்…
இவர் தான் ரூத் மோன்கோமரி
ஆர்தர் போர்ட் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
ஆவி மனிதர் ஆர்தர் ஃபோர்ட்

No comments:

Post a Comment